உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஓடாதீங்க!

0

Posted on : Wednesday, April 13, 2011 | By : ஜெயராஜன் | In :

''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment