உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

துன்பம்

0

Posted on : Sunday, April 17, 2011 | By : ஜெயராஜன் | In :

துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?முதலில் நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிச்செல்ல எண்ணாமல்,அது உங்களிடம் இருப்பதற்கு அனுமதித்தால்,அதை சந்திக்கத் தயாராக இருந்தால்,அதை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்யாமல் இருந்தால் அப்போது நீங்கள் மாறுபட்டவர் ஆகிறீர்கள்.துன்பம் இருக்கும்.ஆனால் அது உங்கள் வெளியே இருக்கும்.அது உங்கள் துன்பமாயிராது.யாருக்கோ நடப்பது போலத் தோன்றும்.ஒரு மெல்லிய இன்பம் உங்களுக்குள் பரவ ஆரம்பிக்கும்.ஏனெனில் நீங்கள் உண்மையில் இன்பமயமானவர்கள்.துன்பத்தை நடு நிலையுடன் பாருங்கள்.என்ன துன்பம்,அது ஏன் வந்தது என்று உணர்ச்சி வசப்படாமல்  பாருங்கள்.அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள்.மனமானது,''துன்பத்தைப் பாராதே,தப்பி ஓடிவிடு ''என்றுதான் கூறும்.ஆனால் தப்பி ஓடி விட்டால் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment