உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பூதம்

0

Posted on : Friday, February 25, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.அதைக் கண்ணன் பார்த்துக் கொண்டு இருந்தான்.அப்போது வெண்ணை திரள்கிறது.அதைச் சாப்பிட கண்ணனுக்கு ஆசை.அம்மாவிடம் தெரியாதது போலக் கேட்கிறான் கண்ணன்,''அது என்ன அம்மா?''யசோதையும் விட்டுக் கொடுக்காமல்,''அது ஒரு பூதம்,''என்கிறாள்.'பூதம் என்ன செய்யும் அம்மா?''-இது கண்ணனின் அடுத்த கேள்வி.''அது நம்மைக் கடித்துத் தின்று  விடும்,''என்று பயமுறுத்துகிறாள் தாய். கண்ணன்,''அம்மா,அது உன்னைக் கடித்துத் தின்று விட்டால்,நான் அம்மாவுக்கு  எங்கே போவேன்?அப்பூதத்தை  என்னிடம் கொடு.நான் அதைக் கடித்துத் தின்று விடுகிறேன்,''என்று சொல்லியவாறே வெண்ணையை எடுத்து விழுங்கினான் கண்ணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment