உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கால் மேல் கால்

0

Posted on : Sunday, February 20, 2011 | By : ஜெயராஜன் | In :

''அதோ,கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிரரே அவர் தான் உன் ஆசிரியரா?''
'ஆமாம்,ஒழுங்காய்ப் படிக்கலைன்னா அறை மேல் அறை கொடுப்பார்.'
**********
''பாபு,உன்னை பல  தடவை கூப்பிட்டேன்.உனக்குக் காது கேட்கவில்லையா?'
'நாலாவது தடவை கூப்பிடும்போது தான் கேட்டது.'
**********
ஆசிரியை: 'நான் அழகாய் இருக்கிறேன்.'இது என்ன காலம்?
மாணவி: அது இறந்த காலம்,டீச்சர்!
**********
ஆசிரியர்: புலி ஆட்டைப் பார்த்தது.இது என்ன காலம்?
மாணவன்: ஆட்டிற்குப் போதாத காலம்,சார்.
**********
''எந்த வேலையாக இருந்தாலும்,உற்சாகமாகப் பாடிக்கொண்டே செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''
'அப்ப,உங்களுக்கு கொசுவை ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லுங்கள்!'
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment