உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எங்கும் பெண்கள்

0

Posted on : Saturday, February 19, 2011 | By : ஜெயராஜன் | In :

இப்போது
பூக்களுக்கு
இறக்கை முளைத்து விட்டது.
அதற்காக வண்டுகள் ஏன் வருத்தப்படுகின்றன.?
**********
பெற்றோரே!
பிள்ளைகளுக்கு

ஏணியாய் அல்ல....
இறக்கைகளாக இருங்கள்.
**********
வான் கோழிகளே  இங்கு
மயிலுக்கு சமமாய்
 மதிக்கப் படவில்லையே!
பின் ஏன்
பிராய்லர் கோழிகள்
பிரசிடென்ட் அவார்டு கேட்டுப் பிராண்டுகின்றன?
**********
மனைவியிடம்
மன்றாடுகிறான்
இப்படி....
அடுக்குமாடி தந்தும்,
கொடுக்கு மாதிரி கொட்டுகிறாயே!
அடுக்குமாடி இது உனக்கு?
**********
கட்டுக் கதை விட்டான்
காதலன்!
காதலிக்குத் தாஜ்மகால்
கட்டுவதாக.
''தாஜ்மகால்''பிறகு கட்டலாம்.
தாலியை உடனே கட்டு''
**********
நாலு பேர் சேர்ந்து
நடுத்தெருவில் சுமக்கும் நாள்
எல்லோருக்கும் வரும்.--அது
ஒரு முறைதான்!ஒரு முறைதான்!
குடித்தழியும்நான் கொண்ட
குடும்பமே நடுத்தெருவில்
எனைச்சுமந்து அழுவதுவோ
தினமும் தான்!தினமும்தான்!
**********
''நிரந்தரம் நோக்கி''என்ற கவிஞர் சட்டநாதன் மோகன்ராஜ் நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment