உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தொழிலில் புதுமை.

0

Posted on : Thursday, November 07, 2013 | By : ஜெயராஜன் | In :

பெண்களைக் கடத்திக் கொண்டு போய் ,பின் அவர்களது கணவர்களுக்குக் கடிதம் எழுதி மிரட்டி பணம் பெற்று விடுவிப்பது அவன் தொழில்.ஒரே மாதிரியாக அத்தொழிலை செய்தது அவனுக்கு போரடித்தது.அனைத்துத் துறையிலும் புதுமை விரும்புவோர் அமெரிக்கா செல்வதாக அறிந்த அவனும் அமெரிக்கா பயணமானான்.அங்கு இவன் தொழிலே  செய்பவர்களைக் கண்டு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்ற விபரம் கேட்டான்.அவர்கள், பெண்ணைக் கடத்திக் கொண்டு வைத்துக் கொண்டு அவர்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து பணம் பறிப்பதாகக்  கூறினர். நம்மாளுக்கோ ஏமாற்றம்.''இதைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தேன்?''என்று அங்கலாய்த்தான்.அமெரிக்கனுக்கும் மானப் பிரச்சினை.தான் தொழிலில் உயர்வானவன் என்று காட்ட வேண்டுமே!''சரி,கடிதத்தில் என்ன எழுதுவாய்?''என்று கேட்டனர்.நம்மாளும் சொன்னான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் உன் மனைவி உனக்கு. இல்லையெனில் அவளைப் பிணமாகத்தான் பார்ப்பாய் என்று எழுதுவேன்.''அமெரிக்கன் சொன்னான்,''அங்குதான் உன் பழமைத்தன்மை வெளிப்படுகிறது.நாங்களெல்லாம் அப்படி எழுத மாட்டோம்.''நம்மவனுக்கு இப்போது சுவாரசியம் வந்து விட்டது .அமெரிக்கன் தொடர்ந்தான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்சம் டாலர் கொண்டு வந்து கொடுக்கா விட்டால் நாங்கள் உன் மனைவியை உன்னிடமே அனுப்பிவிடுவோம் என்று எழுதுவோம்.மறுநாளே அந்த ஆட்கள் அலறி அடித்துக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment