உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெண்

0

Posted on : Thursday, November 21, 2013 | By : ஜெயராஜன் | In :

பெண்ணை மலிவாக நினைக்காதே.,இழிவாகப்பேசாதே,
அடிமையாக நடத்தாதே!
அவளை சக மனுஷியாக நினை;சரிசமமாக நடத்து.
சரியும்,தவறும் செய்யும் சராசரி பிறவியாக நினை.
அதை விட்டுவிட்டு,ஏண்டா பாவி,
தேவதையாக வர்ணிக்கிறாய்,தெய்வமாக வணங்குகிறாய்,
'உலகமே'என்று உளறுகிறாய்?
சமமானவளை  சாமியாக்கி,சாமியாடிவிட்டு,
சகஜம் புரியும்போது,சமாதானம் ஆக முடியாமல்
சமாதியாகி விடுகிறாய்.
கற்பை she-mail க்கு மட்டும் அனுப்பாதே,அது he-mail க்கும்தான்.
எந்த லட்சணத்தில் நீ காப்பாற்றுகிறாயோ கற்பை,
அதே லட்சியத்தில் அவளும்,புரிந்து கொள்!
******
பிடிக்கலையின்னு சொல்ல காரணம் ஆயிரம் இருக்கும்.
ஆனால் பிடிச்சதுக்குக் காரணம் என்னமோ,அனேகமாக 'என்னமோ'வாகத்தான் இருக்கும்.
******
வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி அல்ல அறிவிக்க:
அது ஒரு அனுபவம்-அனுபவிக்க;சுவை-சுவைக்க;ரசனை-ரசிக்க.
******
தன்னிடமுள்ள ப்ளஸ்களை மட்டுமே
சீவிச் சிங்காரித்துக் காட்டி சிக்கிக் கொண்டவர்களின்
காதல் மட்டுமே கல்யாணத்துக்குப் பிறகு
ஒரு சிறு மைனஸ் தென்பட்டாலும் முறிந்துவிடும்.
******
                                        ரா .பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்'என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment