உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-45

1

Posted on : Friday, November 08, 2013 | By : ஜெயராஜன் | In :

விசிறியை அசைக்காமல் காற்று வராது.
உழைப்பில்லாமல் உயர்வு வராது.
******
புத்திசாலித்தனமான குழந்தை
மகிழ்ச்சியான தந்தையை உருவாக்குகிறான்.
******
வெற்றி நமது தவறுகளை மூடி மறைத்துவிடும்.
******
கடமை உங்கள் வாசல்கதவைத்தட்டும் போது உடனே உள்ளே அழையுங்கள்.
காக்க வைத்தீர்களோ,அது புறப்பட்டுப்போய் இன்னும் ஏழு கடமைகளை அழைத்து வந்துவிடும்.
******
பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்.
போகும்போது பல கால்களுடன் போகும்.
******
நீ நிமிர்ந்து நிற்கும்வரை உன் நிழல் கோணலாய் இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
******
சந்தேகம்,நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.
அதன் ஒரு பாகமே.
******
இரக்கத்தின் பனித்துளி கண்ணீர்.
******
துளசிக்கு வாசமும்,முள்ளுக்குக்  கூர்மையும்
முளைக்கிறபோதே தெரியும்.
******
அசுத்தம்,வறுமை,துன்பம் எங்கு இருக்கிறதோ,அங்கு இசை இருக்க முடியாது.
******
கிணறு வற்றியபின் தான் தண்ணீரின் அருமை நமக்குத் தெரிகிறது.
******
கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.
******
தங்கத் திறவுகோல் எல்லா பூட்டுக்களுக்கும் சேரும்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

mmmmm...

Post a Comment