உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அழைப்பா,விசாரணையா?

1

Posted on : Tuesday, November 19, 2013 | By : ஜெயராஜன் | In :

அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசி முடித்துக் கீழே இறங்கினார். அப்போது ஒரு நிருபர் கேட்டார்,''நீங்கள் மது குடிப்பது உண்டா?''அரசியல்வாதி கேட்டார்,''இது அழைப்பா,விசாரணையா?''
******
தபால் அலுவலகத்துக்கு கோபத்துடன் ஒருவர் வந்தார்.''எனக்கு அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது.இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.''என்று கத்தினார்.அங்கிருந்த அதிகாரி,''இதுஉடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.நீங்கள் முழு விபரங்கள் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு உதவத் தயார்.இப்போது சொல்லுங்கள்,யாரிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள்  வருகின்றன?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''வருமான வரி அலுவலகத்திலிருந்து.''
******
''என் மனைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.என்ன  செய்வது என்றே தெரியவில்லை,''என்று நண்பரிடம் அங்கலாய்த்தார் ஒருவர்.நண்பர் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.என் மனைவியும் அடிக்கடி தனக்குத்தானே பேசிக் கொள்வாள்.அவளுக்கே அது தெரிவதில்லை.என்ன,அவள் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வாள்.''
******
குடிகாரன் ஒருவன் சாக்கடையில் விழுந்து கிடந்தான்.அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கேட்டார்,''மது செய்த வேலைதானே இது?''குடிகாரன் சொன்னான்,''இல்லை,இது வாழைப்பழத் தோல் செய்த வேலை.''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஹா... ஹா....

Post a Comment