உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன கவலை?

1

Posted on : Saturday, November 16, 2013 | By : ஜெயராஜன் | In :

முடி திருத்துபவர் முல்லாவிடம் சொன்னார்,''உங்களுக்கு முடி நிறைய உதிர்கிறதே!''முல்லா சொன்னார்,''எனக்கு ரொம்பக் கவலை.அதனால்தான் முடி உதிர்கிறது.''முடி திருத்துபவர் கேட்டார்,''அப்படி உங்களுக்கு என்ன தான் கவலை?''முல்லா சொன்னார்,''முடி உதிர்கிறதே என்ற கவலைதான்.''
******
நண்பர் முல்லாவிடம் சொன்னார்,''அன்றைக்கு நடந்த கூட்டத்திற்கு மனைவியுடன் வந்திருந்தீர்களே!பாவம்,உங்கள் மனைவிக்குதான் அன்று உடல் நிலை சரியில்லைபோல.தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார்களே!''முல்லா சொன்னார்,''அது வேறொன்றுமில்லை.அன்றுதான் அவள் புதிய நகை ஒன்று அணிந்திருந்தாள்.''
******
முல்லா,கடைவீதியில் வாங்க வேண்டியதை எல்லாம் முடித்துவிட்டு காரை எடுத்தார்.அப்போது கார் முன்னால்  நின்ற வண்டி மீது இடித்தது.அவசரமாக தனது காரை பின்புறம் நகர்த்தினார்.அப்போது கார் பின்னால் நின்று கொண்டிருந்த காரில் இடித்தது.ஒரு வழியாக சமாளித்து காரை சாலையில் திருப்பும்போது வந்து கொண்டிருந்த வண்டியில் இடித்தார்.உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.''உங்கள் லைசென்சைக் காட்டுங்கள்''என்று அவர் கேட்க முல்லா சொன்னார்,''ஏன் சார்,எனக்கு எவனாவது லைசென்ஸ் தருவானா?''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

haa haa..

Post a Comment