உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மயங்குகிறாள் ஒரு மாது

1

Posted on : Monday, November 18, 2013 | By : ஜெயராஜன் | In :

கம்ப ராமாயணத்தில் ரசிக்கக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.
அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.அப்போது அவர் நினைவெல்லாம் ராமன்தான்.ராமனுடைய சிறந்த குணங்கள் ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி மகிழ்கிறார்,கண்ணீர் சொறிகிறார்.நட்பின் இலக்கணமான ராமனைப் பற்றி நினைக்கும் பாடல் ஒன்று:

''ஆழ நீர்க் கங்கை  அம்பி கடாவிய 
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி
 தோழன் மங்கைகொழுந்தி எனச்சொன்ன
  வாழி நட்பினைஉண்ணி மயங்குவாள்.''

ஆழமான நீரை உடைய கங்கை நதியில் படகு ஓட்டும்ஏழை வேடன் குகன் செய்த உதவிக்கு நன்றி கூறும் ராமன் சொல்கிறார்,''நீ என் தம்பி.என் தம்பி உன் தோழன்.என் மனைவி உன் கொழுந்தி.''ஏழை வேடனிடம் இப்படி ராமன் நட்பு பாராட்டியுள்ளதை சீதை நினைவு கூர்வதாக கம்பன் அழகாக வர்ணித்துள்ளார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அழகான பாடல்..

Post a Comment