உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஜிப்ரிஷ்

0

Posted on : Thursday, November 14, 2013 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி ஜப்பார் தன்னிடம் வருபவர்களையெல்லாம் உட்கார்,ஆரம்பி என்று சொல்வார்.அவர் எந்த போதனையும் செய்வதில்லை.வருபவர்கள்தான்  பேச வேண்டும்.அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் பேசி வெளியேற்றி விட வேண்டும்.சில சமயம் அவர்கூட கண்டபடி உளறுவார்.அதுபோல வருபவரையும் உளறச்சொல்வார்.மனிதர்களால் எவ்வளவு நேரம்தான் உளற முடியும்?எவ்வளவு நேரம்தான் பேச முடியும்?எல்லாம் கொட்டியபின் மனம் வெறுமையாகி விடும்.அவர்கள் மௌனமாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள். மனம் காலியான பின் ஒரு சூன்யம் தோன்றும்.அந்த வெறுமையில் தோன்றுவதுதான் விழிப்புணர்வு எனும் சுடர்.உண்மையில் அது அங்கேதான் இருந்தது.அதை மூடியிருந்த சிந்தனைகளையும், எண்ணங்களையும், இரைச்சல்களையும் எடுத்தெரிந்த பின்னர் அது தானே வெளிப்படுகிறது. ஜப்பார் கொண்டு வந்த இந்த முறை பிரபலமடைந்து,இன்று அவர் பெயரால் ஜிப்ரிஷ் என்று அழைக்கப் படுகிறது.
உடலுக்கும் இதே  தன்மை உண்டு.எண்ணற்ற இறுக்கங்கள் உண்டு.நிர்ப்பந்தம் இல்லாமல் அது விரும்பும் அசைவுகளைச் செய்ய விடுங்கள். ஆடலாம், பாடலாம்,விழுந்து புரளலாம்,எதுவாயினும் சரி,செய்யட்டும்.வலிந்து திணிக்கக் கூடாது.அவ்வளவே.உடல் விரும்பிய அசைவுகளை செய்ய விட்டால் ஏற்படும் இறுக்கம் நீங்கிய தளர்வு நிலை இருக்கிறதே,அது ஒரு பரம சுகமான நிலை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment