உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பலசாலி

0

Posted on : Sunday, November 17, 2013 | By : ஜெயராஜன் | In :

பல் டாக்டரிடம் சென்று முல்லா,''இங்கு பல் பிடுங்குவதற்கு என்ன கட்டணம்?:''என்று கேட்டார்.டாக்டர் சொன்னார்,''சாதாரணமாய் பிடுங்குவதற்கு முன்னூறு ரூபாய் ஆகும்.ஆனால் வலி அதிகம் இருக்கும்.மயக்க மருந்து கொடுத்து பிடுங்கினால் வலி  தெரியாது ஆனால் கட்டணம் ஐநூறு ரூபாய் ஆகும்,''முல்லா சொன்னார், ''பரவாயில்லை, முன்னூறு ரூபாய் கட்டணத்திலேயே பிடுங்கிக் கொள்ளலாம்,''உடனே டாக்டர், ''பரவாயில்லையே, நீங்கள் பலசாலி மட்டுமல்ல,தைரியசாலியும் கூட,''என்றார்.முல்லா சொன்னார், ''எனக்குப் பல்பிடுங்க வேண்டியதில்லை .என்மாமியாருக்குத்தான் பிடுங்க வேண்டியிருக்கிறது.''
******
முல்லா சரியான சோம்பேறி.அலுவலகத்துக்கு தினசரி தாமதமாக வந்து கொண்டிருந்தார். முதலாளி கூப்பிட்டு சொல்லிவிட்டார்,''இனி ஒரு நாள் தாமதமாக வந்தால் கூட உன்னை வேலையில் வைத்துக் கொள்ள மாட்டேன்.''முல்லா அன்றே ஒரு டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிட்டார்.
முல்லா அரை மணி நேரம் முன்னாலேயே அன்று வருவதைப் பார்த்த முதலாளி கேட்டார் ,''பரவாயில்லை,இதே மாதிரி தினமும் வர வேண்டும்.அது சரி,நேற்று நீ எங்கே போயிருந்தாய்?''
******
முல்லா தனது குடும்பத்தினருடன் ஒரு மலைப் பகுதிக்கு உல்லாசப் பயணம் சென்றார்.அவரது மனைவி இயற்கை அழகில் ஒன்றி விட்டார்.ஒவ்வொரு மரம் செடி கொடியையும் ரசித்துக் கொண்டே வந்த அவர் ஒரு முகட்டின் ஓரத்திற்கு வந்து விட்டார்.சற்றே நகர்ந்தாலும் கீழே விழ வேண்டியது தான்.அதை அவர் கவனிக்கவில்லை.அப்போது முல்லாவின் பையன் அவரிடம் வந்து,''அம்மா,அப்பா, ஒன்று,நீ பின் பக்கமாக உடனே இரண்டு அடி எடுத்து வைக்க வேண்டும்,அல்லது கையில் வைத்திருக்கும் தின் பண்டங்களை என்னிடம் கொடுத்து விட வேண்டும்,என்று சொல்லச்சொன்னார்.''என்றான்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment