உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உண்மையை எழுதவா?

0

Posted on : Saturday, June 02, 2012 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவில் நிக்சன் அதிபராக இருந்தபோது ஒரு முன்னணிப் பத்திரிகை அவரைப்பற்றி மிக அவதூறாக எழுதி வந்தது.அதனால் அவர் பெயருக்கே களங்கம் வரும் நிலை ஏற்பட்டது.பொறுக்க முடியாமல் அவர் ஒருநாள் அந்த பத்திரிகை அலுவலகம் சென்று அதன் ஆசிரியரிடம்,''என்னைப்பற்றி ஏன் இவ்வளவு அவதூறாக எழுதுகிறீர்கள்?நீங்கள் எழுதுவதில் உண்மை எள்ளளவும் கிடையாது என்று உங்களுக்கே தெரியும்.உங்கள் நோக்கம் தான் என்ன?''என்று கேட்டார்.அமைதியாக ஆசிரியர் சொன்னார்,''இதோ பாருங்கள்,மிஸ்டர் நிக்சன்,நாங்கள் உங்களைப் பற்றி எழுதுவது அனைத்தும் உண்மை இல்லை என்று அறிவோம்.ஆனால்....உங்களைப்  பற்றிய உண்மைகளை எழுதினால் விளைவுகள் இதை விட மோசமாக இருக்குமே!என்ன,உண்மையை எழுதவா?''சப்தம் போடாமல் நிக்சன் அந்த இடத்தைக் காலி செய்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment