உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உன்னைச்சுற்றி

0

Posted on : Friday, June 29, 2012 | By : ஜெயராஜன் | In :

எந்த உத்தரவுக்கும் கீழ்ப்படியாதே!
        உனக்குள்ளிருந்து எழுவதைத் தவிர !
எந்தக் கடவுளும் இல்லை,வாழ்வைத்தவிர!
சத்தியத்தை வெளியே தேடாதே.
        அது உனக்குள்ளே இருக்கிறது.
பிரார்த்தனை என்பது எதை நோக்கியும் வணங்குவது இல்லை.
        எல்லோரிடமும் அன்பாக இருப்பதே பிரார்த்தனை.
சத்தியத்தின் வாசல்,வழி,முடிவு எல்லாமே
      பலன் நோக்காமைதான்.
வாழ்க்கை என்பது இங்கு,இப்போது இருப்பதுவே.
    முழுமையான விழிப்புடன் வாழ்.
நீந்த வேண்டாம்.மிதந்து கொண்டு இரு.
ஒவ்வொரு வினாடியும் இர;அப்போதுதான்
     ஒவ்வொரு வினாடியும் நீ புதுப்பிக்கப் படுவாய்.
தேடுவதை நிறுத்தி,நில்!பார்! எல்லாம்
      உன்னைச்சுற்றி உன் எல்லைக்குள்தான் இருக்கின்றன.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment