உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறிமுகம்

1

Posted on : Thursday, June 21, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவிடம் அவரது நண்பர் ஒருநாள் கேட்டார்,''முல்லா,உன் மனைவியை முதன் முதலாய் யார் உனக்கு அறிமுகம் செய்து வைத்தது?''முல்லா சொன்னார்,''அது ஒரு விபத்து..அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.''
***********
முல்லா ஒரு துறவியை மன அமைதி வேண்டி பல முறை சென்று பார்த்தார்.ஆனால் அவர் முல்லாவிடம் ஒன்றுமே பேசவில்லை.வெறுத்துப் போன முல்லா அவரிடம்,''நான் பல முறை வந்தும் நீங்கள் எனக்கு ஒரு அறிவுரையும் கூறவில்லை.மற்றவர்களுக்கு நீங்கள் சொல்வதும் எனக்குப் புரியவில்லை.எனக்கு மன அமைதி கிட்ட ஏதேனும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.நான் அதன் படி நடந்து கொள்வேன்.''என்றார்.துறவி சொன்னார்,''பிறருக்கு நல்லது செய்.பின் அதை கிணற்றில் தூக்கிப் போடு.''முல்லாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றார்.அடுத்த நாள் வழக்கத்துக்கு மாறாக அவரது மாமியாரை மெதுவாக அழைத்து அவர் விரும்பிய இடத்துக்கு கூட்டிச் சென்றார்.மாமியாருக்கோ மிகுந்த மகிழ்ச்சி.எப்போதும் சிடுசிடுவென இருக்கும் மருமகன் இன்று உதவி செய்துள்ளாரே என்று.சிறிது நேரம் கழித்து முல்லா அவரைத் தூக்கிக் கொண்டுபோய் கிணற்றில் போட்டு விட்டார்.முல்லாவின் மனைவி பதறி ஓடி வந்து ,''ஏன் இப்படி செய்தீர்கள்?''என்று கேட்டாள்.முல்லாவும் தான் துறவி சொன்னபடியே நடந்ததாகக் கூறினார்.முல்லாவின் மனைவி துறவியிடம் சென்று நடந்ததைக் கூறி விளக்கம் கேட்க துறவி தன் தலையில் அடித்துக் கொண்டு,''இருந்திருந்தும் இவனுக்குப் போய் நான் அறிவுரை கூறினேனே!நானும் நீண்ட நாள் தவிர்த்துப் பார்த்தேன்.அன்று மிகவும் வலியுறுத்தியதால் சொன்னேன்.நான் சொன்னது ஒரு சூபி பொன்மொழி.அதன் பொருள்,நல்லது செய்,உடனே அதை மறந்துவிடு என்பதாகும்.''என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

haaa haaa

Post a Comment