உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்போமே!

0

Posted on : Saturday, June 30, 2012 | By : ஜெயராஜன் | In :

''இந்தக் கார் வாங்கினதிலிருந்து ஒரு ரூபாய் கூட ரிப்பேருக்காகக் கொடுக்கவில்லை.''
.அமாம்,உன் மெக்கானிக் கூட அப்படித்தான் சொன்னான்.'
********
மனைவி:உங்க நண்பர் உங்க கிட்ட கடன் வாங்க வந்திருக்கிறார் போலத் தெரிகிறதே?''
கணவன்:எப்படி அவ்வளவு சரியாகக் கண்டு பிடித்தாய்?'
மனைவி:நான் சீனி போடாமல்,தண்ணீராகக் கொடுத்த காபியை அவ்வளவு புகழோ புகழ் என்று புகழுகிறா ரே,அதனால் தான் கேட்டேன்.
********
''வானத்தில் மூன்று கிளிகள் பறந்து கொண்டிருந்தன.முதல் கிளி,தன் பின்னால் இரண்டு கிளிகள் வருவதாகச் சொன்னது.இரண்டாவது கிளியும்,மூன்றாவது கிளியும் அவ்வாறே தங்கள் பின்னால் இரண்டு கிளிகள் வருவதாகச் சொல்லின.அதெப்படி?''
'கிளிகள் தான் சொன்னதையே சொல்லுமே!'
********
''தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..ஏன்?''
'தம்பி தோல் வைத்தியராய் இருப்பார்.'
********
தாய்:ஏண்டா,பால் முழுவதையும் பூனை குடிக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்?
மகன்:இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
********
''கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாது.''
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'
''கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?''  
********
''ஆபீசுக்கு குடிச்சிட்டு போதையில் போனது தப்பாப் போச்சு.''
'ஏன்?என்ன ஆயிற்று?''
''இப்ப என்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க.''
********
''உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் திருமணத்துக்குப் பின் நீங்கிடுச்சாமே?''
'ஆமாம்,கடைசியா இருந்தது சந்தோசம்,இப்ப அதுவும் நீங்கிடுச்சு.'
******** 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment