உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரிந்து கொள்ள

1

Posted on : Monday, June 25, 2012 | By : ஜெயராஜன் | In :

'பிரேசில்'என்பது ஒரு மரத்தின் பெயர்.
********
மிகப் பழமையான நகரம் பாபிலோன்.கி.மு.3500 இல் அதன் மக்கள்தொகை 80,000.
********
பின்லாந்து ஏரிகள் நிறைந்த நாடு.இங்கு 55,000 ஏரிகள் உள்ளன.
********
'Fools cap paper' என்பது  17''x13.5'' அளவுடையது.பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை இந்த மாதிரித் தாள்களின் அசல் தன்மையை குறிக்க சர்க்கஸ் கோமாளிகள் அணியும் தொப்பியை வாட்டர் மார்க்காகப் பயன் படுத்தினார்கள்.அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் வந்தது.
********
1822 இல் கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் தான் ஊட்டியைக் கண்டறிந்தார். 
********
'பெரூலா'என்ற செடியின் வேரிலிருந்து வரும் பாலிலிருந்துதான் பெருங்காயம் செய்யப்படுகிறது.இந்தச்செடி ஈரானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் கிடைக்கிறது.
********
அயர்லாந்து தேசியக் கோடியில் ஹார்ப் என்ற இசைக் கருவி உள்ளது.உலகிலேயே இக்கொடியில் மட்டுமே ஒரு இசைக் கருவி இடம் பெற்றுள்ளது.  
********
காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டம் வழங்கியவர் தாகூர்.
********
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அல் அசார் பல்கலைக்கழகம் உள்ளது.குர் ஆனில் ஏற்படும் எச்சந்தேகத்திற்கும் இங்கு அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
******** 
நீண்ட நாள் கழித்து மிக நெருங்கிய ஒருவரைப் பார்க்கும்போது நம் உடலில் உள்ள எல்லா சுரப்பிகளும் திரவங்களை சுரக்கும்.அதுபோல கண்ணில் உள்ள லாக்ரிமல் என்ற சுரப்பியும் அதிகமாக சுரப்பதால் கண்ணீர் அரும்பி வழியும்.  
இதுதான் ஆனந்தக் கண்ணீர்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

nalla arumaiyaan -
thakavalkal!0

Post a Comment