உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கிளி பேசுமா?

0

Posted on : Wednesday, June 20, 2012 | By : ஜெயராஜன் | In :

சர்வாதிகார நாடு ஒன்றில் வாழ்ந்து வந்த ஒருவன் கிளி ஒன்றினை ஆசையாய் வளர்த்து வந்தான்.ஒரு நாள் திடீரென கிளி காணாமல் போய் விட்டது.மிகுந்த கவலையுடன் அவன் காவல் நிலையம் சென்று தன் கிளியைக் கண்டு பிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான்.அங்கிருந்த காவல் அதிகாரி அவனைப் பற்றியும் அவனுடைய கிளியைப் பற்றியும் பல விபரங்களைக் கேட்டார்.அவர் ,''உன்னுடைய கிளி நன்றாகப் பேசுமா?''என்று கேட்டார்.ஒரு நிமிடம் மிகுந்த அச்சத்துடன் யோசித்தான்.பின் அவன் தயங்கியபடியே சொன்னான்,''  கிளி நன்றாகப் பேசும் .ஆனால்  அது  பேசும் அரசியல்  கருத்துக்கள்  எல்லாம்  அதனுடைய  சொந்தக்  கருத்துக்களே. .எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment