உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மிருகம்

0

Posted on : Tuesday, May 25, 2010 | By : ஜெயராஜன் | In :

வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி; ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு;தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி; சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்; பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன்  கழுதை;தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
                                                       --மகா கவி பாரதியார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment