உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சோம்பேறி

0

Posted on : Thursday, May 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் ஒரு கெட்டிக்கார சோம்பேறி இருந்தான்.அவன் எந்த வேலையும் தான் செய்யாது,மற்றவர்கள் மூலமே செய்து கொள்வான்.
ஒரு சமயம் அவன் தன தோட்டத்தில் ஒரு புதிய கிணறு தோண்ட விரும்பினான்.சில அடி தூரம் அவன் தானே தோண்டி விட்டு மேலே ஏறி வந்து தன வேட்டியையும் முண்டாசையும் அவிழ்த்துப் பள்ளத்தருகே வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
அவன் போன பின் அந்தப் பக்கம் வந்த கிராம மக்கள் பாதி தோண்டப்பட்ட கிணற்றோரம் அவன் துணிகளைப் பார்த்து விட்டு உள்ளே எட்டிப் பார்த்து ஒருவரும் இல்லாததால் அவனை மண் சரிந்து மூடி விட்டது என்றெண்ணி  எல்லோரும் கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.தண்ணீர் தென்படும் வரை தோண்டியும் உடல் கிடைக்காததால் எல்லோரும் வீடு திரும்பினர். சிரமப்படாமல் தன கிணறு முழுக்கத் தொண்டப்பட்டதைக் கண்டு அந்தக் கெட்டிக்காரச் சோம்பேறி மகிழ்ச்சி அடைந்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment