உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிறந்த அறிஞர்

0

Posted on : Monday, May 03, 2010 | By : ஜெயராஜன் | In :

சாக்ரடீசுக்கு சிறையில்நஞ்சு கொடுக்கப் படுவதற்கு முன் டெல்பியிலிருந்த தெய்வீக அசரீரி,அவரை,முழு உலகிலும் மிக அறிவு கொண்டவர் என்று மொழிந்தது.இதைக் கேட்டு மகிழ்வடைந்த பலர் ஏதென்ஸ் சென்று அவரிடம்,''இதுவரை இதுபோல் நடந்தது இல்லை.இதற்கு முன் யாரையும் டெல்பியின் தெய்வ வாக்கு உலகிலேயே சிறந்த அறிஞர் என்று கூறியதில்லை.உங்களைத் தான் சிறந்த அறிஞர் என்று கூறியிருக்கிறது.நீங்கள் தான் உலகின் சிறந்த அறிஞர்.''என்றனர்.
அதற்கு சாக்ரடீஸ் ,''நீங்கள் டெல்பிக்குத் திரும்பச்சென்று,இது நாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும்,இம்முறை அது தவறு செய்து விட்டது என்று அதனிடம் கூற வேண்டும்.ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது.''செய்தி கொண்டு வந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அவர்கள் திரும்பச் சென்று தெய்வ வாக்கிடம்,''சாக்ரடீஸ் இதை மறுக்கிறார்.அவர் உலகிலேயே சிறந்த அறிவாளி இல்லை என்றும் தனக்கு  ஒன்றும் தெரியாது என்றும் கூறுகின்றார்,''என்றனர்.
இங்கே தான் இந்த சம்பவத்தின் அழகே இருக்கிறது.தெய்வ வாக்கு,''அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.இதில் முரண்பாடு எதுவுமில்லை.''என்று கூறியது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment