உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாய் மொழி

0

Posted on : Sunday, May 02, 2010 | By : ஜெயராஜன் | In :

ராஜா டோஜ்ஜின் தன் அரண்மனையில் அறிஞர்களுக்கு மிக முக்கியத்துவம்  கொடுத்தார்.எனவே காளிதாசர் உட்படப் பல அறிஞர்கள் அங்கே குவிந்திருந்தனர்.ஒரு நாள் அரசவைக்கு வந்த ஒருவன்,தான் முப்பது மொழிகளில் சரளமாகப் பேச வல்லவன் என்றும் அதில் எது அவன் தாய் மொழி என்று கண்டு பிடிக்கும் அறிஞருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகவும்,கண்டுபிடிக்க முடியாவிடில் ஒவ்வொரு அறிஞரும் தலா ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டும் என சவால் விட்டான்.எல்லா அறிஞர்களும் இப்போட்டியில் தோற்றனர்.அவன் எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசியதால் யாராலும் வித்தியாசம் காண இயலவில்லை. காளிதாசர் அவனை மேடைக்கு அழைத்து,அவன் கடைசிப் படியில் ஏறியதும் அவனைப் பிடித்துக் கீழே தள்ளினார்.அவன் படிக்கட்டிக்களில் உருண்ட போது கோபத்தில் கத்தினான்.காளிதாசர் சொன்னார்,''இப்போது எந்த மொழியில் கத்தினாயோ,அது தான் உனது தாய்  மொழி,''என்றார்.அவன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
கோபத்தில் உங்கள் நினைவு உங்கள் வசம் இருப்பதில்லை.மேலும் இது தன் சவாலுக்கு பதில் என்பதை அவன் உணரவில்லை.அவனது மனதின் அடி ஆழத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது அவனது தாய் மொழி தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment