உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா?

0

Posted on : Monday, May 31, 2010 | By : ஜெயராஜன் | In :

உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்.பூமியில் கால் படாமல் வானில் ஆகாய விமானத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தால் நம் கீழே உலகம் நம்மை விட்டுச் சுற்றுமா?
சுற்றாது.பூமிக்கு மேலே சில கிலோமீட்டர்  வரை  காற்றழுத்த மண்டலம் உண்டு.அந்த மண்டலமும் பூமியோடு சேர்ந்து சுற்றுகிறது.எனவே காற்றழுத்த மண்டலத்தில் இருப்பவர்களும் (பூமியில் கால் படாமல் இருந்தாலும)பூமியோடு சேர்ந்து சுற்றத் தான் செய்வர்.
**********
நம் முகத்தில் யாராவது பளாரென்று  அடித்தால் நாம் நட்சத்திரங்கள்  பறப்பதாக  உணருகிறோம் அல்லவா?சிலர் இதைப் பூச்சி பறப்பது போல்  இருப்பதாகச் சொல்கிறார்கள்.இது ஏன்?
கண் நரம்பு ,பொதுவாகக் கண்ணில் விழும்  ஒளிக் குறிகளைத் தான் மூளைக்கு எடுத்துச் செல்லும்.ஆனால் வலி போன்ற பாதிப்புகளை,அந்த நரம்பு மூளைக்கு உணர்த்தும் போதும்,மூளை,அதை ஒளிக் குறிப்பாகவே,பழக்கம் காரணமாக எடுத்துக் கொள்கிறது.அதனால் தான்  நம்  உடலில் வலியோ,சூடோ ஏற்படும் போது நாம் பூச்சிகள் அல்லது நட்சத்திரங்கள் பறப்பதாக உணர்கிறோம்.
**********
பனிக்  கட்டியைப் பார்த்தால் அதைச் சுற்றிப் புகை வருகிறதே?ஏன்?எப்படி?
அந்தப் புகை பனிக்  கட்டியிலிருந்து வருவதில்லை. பனிக்கட்டியைச் சுற்றி காற்றில் நீராவி இருக்கிறது.ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.பனிக்கட்டியின் குளிர்ச்சி நீராவியைக் குளிர்வித்து மிக நுண்ணிய நீர்த் திவலையாக மாற்றுகிறது.அது தான் புகை மாதிரி தெரிகிறது.இன்னும் சொல்லப் போனால் அதுவும் ஒரு வகை மேகம் தான்.
**********
நெற்றிப் பொட்டில் அடித்தால் மரணம் சம்பவிப்பது ஏன்?
நெற்றிப்பொட்டுப் பகுதி மற்ற பகுதிகளை விட வலிமை குறைந்தது.அடியால் அது பாதிக்கப் படும் போது தலைக்குள் மண்டையோடு முழுவதும் வியாபித்திருக்கும் மூளை அதிர்கிறது.மரணம் அளவுக்கு அப்பதிப்பு போகிறது.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment