உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாக்குதல்

0

Posted on : Sunday, May 02, 2010 | By : ஜெயராஜன் | In :

அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த குடியிருப்பில் பேசுவது கேட்கவே செய்யும்.ஒரு அடுக்கு மாடி வீட்டில் அனைவரும் ஒரு விஷயத்தைப் பற்றி புதிராக உணர்ந்தனர்.ஒவ்வொரு தம்பதியினரும் சண்டையிட்டுக் கொண்டும் கூச்சலிட்டுக்  கொண்டும் இருக்க,ஒருவர் வீட்டிலிருந்து மட்டும் எப்போதும் சிரிப்பு சப்தம் கேட்க முடிந்தது.ஒரு நாள் விபரம் அறிய அனைவருமொன்று கூடி அவரிடம் கேட்டார்கள்.அவர் சொன்னார்,''என்னை வற்புறுத்தாதீர்கள்.அந்த ரகசியம் அவமானகரமானது.''அனைவரும் மிக வற்புறுத்திக் கேட்க அவர்  சொன்னார்,''என் மனைவி சாமான்களை என் மீது வீசுவாள்.அவள் குறி தவறினால் நான் சிரிப்பேன்.என்னைத் தாக்கி விட்டால்  அவள் சிரிப்பாள்.நான் அவள் தாக்குதலை தவிர்க்க கற்றுக் கொண்டுள்ளேன், அவள் என்னை எப்படித் தாக்குவது என்று கற்றுக் கொள்கிறாள்.''
இருபது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர்,தனது மனைவியிடமிருந்து மண விலக்கு கேட்க,அவர்களது சிரிப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த நீதிபதி,காரணம் கேட்டார்.அவர் சொன்னார்,''அவள் என்னை அடிக்கிறாள்.நான் பலவருடங்களாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.''
நீதிபதி கேட்டார்,''இத்தனைஆண்டுகள் சமாளித்த உனக்கு இன்னும் சில ஆண்டுகள் சமாளிக்க முடியாதா?''
அந்த மனிதர் சொன்னார்,''விஷயம் அதுவல்ல.முதலில் என்னால் அவளுடைய தாக்குதல்களைத் தவிர்க்க முடிந்தது.இப்போது அவள் நன்றாகக் குறி வைக்கிறாள்.கடந்த பத்து ஆண்டுகளாக அவள் மட்டும் தான் சிரிக்கிறாள்.ஆரம்பத்தில் பாதிப் பாதியாக இருந்த பிரச்சினை  இப்போது எனக்கு முழு பாதிப்பாக மாறி விட்டது.என்னால் தாங்க முடியவில்லை.நான் ஒரு முழு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறேன்.இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment