உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விளக்கம்

0

Posted on : Sunday, May 30, 2010 | By : ஜெயராஜன் | In :

தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது  ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
                                                                                        பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
                         உண்மையே பேசுபவர்கள்.
                         இனிமையாகப் பேசுபவர்கள்.
                         அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
                               நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
                               நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
                                                            ---ஆதி சங்கரர்.
                                                      (ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment