உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ரூசோ

1

Posted on : Wednesday, January 29, 2014 | By : ஜெயராஜன் | In :

அரசியல் தத்துவ மேதை ரூசோவின் சில சிந்தனை சிதறல்கள் :
*ஒரு மனிதன் தன்னிச்சையாகக் காரியங்கள் செய்ய அனுமதிக்கப் படுகிற வரையில்தான் தர்ம நியாயமாக நடந்து கொள்வான்.
*மானிட சுபாவம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சுபாவம் இல்லை.அதேபோல எப்போதும் சமாதானமாக வாழும் சுபாவமும் இல்லை.
*விருப்பம் போலக் காரியங்கள் செய்வது அடிமைத்தனம்.தானே வகுத்துக் கொண்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது சுதந்திரம்.
*சமூகமானது,உடல் பலத்தின் காரணமாக மனிதர்களிடையே உண்டாகிற சமத்துவமின்மைக்குப் பதிலாக ,ஒழுக்க ரீதியான,சட்ட ரீதியான ஒரு சமத்துவத்தை அளிக்கிறது.மனிதர்கள் உடல் பலத்திலும்,அறிவிலும் வித்தியாசப்பட்டவர்களாக இருந்தபோதும் சட்ட ரீதியாக சமத்துவம் உடையவர்களாக ஆக்குகிறது.
*ஒரு தேசத்தில் எவ்வளவுகெவ்வளவு சட்டங்கள் இயற்றப்படுவது குறைவாக இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அத்தேசம் புகழ் பெறுகிறது.
*அரசு அதிகாரிகள் மக்களுடைய எஜமானர்கள் அல்ல.அவர்களுடைய காரியஸ்தர்கள்.அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்.
*அரசுப்பணி என்பது ஒரு நபருக்குக் காட்டப்படுகிற சலுகை அல்ல.ஒரு நபருக்கு அளிக்கப்படும் பொறுப்பு.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சுதந்திரம் உட்பட அனைத்து சிதறல்களும் அருமை...

Post a Comment