உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-47

4

Posted on : Saturday, January 18, 2014 | By : ஜெயராஜன் | In :

எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.
******
ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான்.
******
சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால்
ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது.
******
அவசியப்பட்டதை வாங்குவான் கணவன்.
ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி.
******
மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும்.
சினந்து கொண்டு பரிமாறினால் வாழ்க்கையே விழும்.
******
வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.-பெரிதும் திண்டாடுவீர்கள்.
******
'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும்.
******
கொண்டவன் துணை உண்டானால்
கொடிய பாம்பும் புடலங்காய்.
******
உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும் உபத்திரவம்.
******
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
******
ஒருவன் பேசுவது மற்றவனுக்கு விளங்காவிட்டால் அது தத்துவம்.
அவன் பேசுவது அவனுக்கே விளங்காவிட்டால் அது வேதாந்தம்.
******


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (4)

ஒவ்வொன்றும் உண்மைகள் தான் ஐயா...!

ithu anaiththum anubava varthaigala ayya ?

அனுபவம் தான் வாழ்க்கை நண்பரே!

அனுபவமே பாடம் ! அருமை !

Post a Comment