உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாசிக்கு அறிவுரை.

3

Posted on : Wednesday, January 22, 2014 | By : ஜெயராஜன் | In :

சுப்ரதீபக் கவிராயர் தனது' கூளப்பநாயக்கன் காதல்' என்ற நூலில் தாசி ஒருத்தி,தன்  மகளுக்கு அறிவுரை கூறுவது போன்று ஒரு நிகழ்ச்சி உள்ளது.அதில் தாசி தன் மகளைப் பார்த்துக் கூறுகிறாள்:
''மகளே...நீ அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவன் தேடி வந்தால்,'எனக்கு சுகமில்லை'என்று சொல்லி அனுப்பிவிடு.அவன் ஒரு பைசா கூடத் தரமாட்டான்.
யார் வந்தாலும் வந்தவுடன் விசாரி.அவன் தாத்தா பணக்காரன் என்றால்,நீ அவனை விட்டு விடாதே.அவனுக்கு அவன் தாத்தா பொருள் சேர்க்கப் பட்ட துன்பங்கள் தெரியாது.அள்ளி அள்ளிக் கொடுப்பான்.
தகப்பன் தேடி வைத்த சொத்தை அனுபவிப்பவன் வந்தால் அவனை ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடு.ஏனெனில் அவனுக்குத் தந்தை பட்ட துன்பங்கள் தெரியும்.
வந்தவன் தன உழைப்பால் பணக்காரன் ஆனவன் என்று தெரிந்தால்,அவனை வாசல் நடையில் கூட ஏற்றாதே.அவன் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்ப்பான்.அவனால் எந்தப் பயனும் இல்லை.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

உண்மை தான் ஐயா...

மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் ஐயா:- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

படித்தேன் , ரசித்தேன் உண்மையும் கூட !

Post a Comment