உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வீண் பேச்சு

1

Posted on : Saturday, January 11, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தனது நண்பனிடம்,''இன்று காலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே பிரச்சினை. நான் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன்.என் மனைவியோ சினிமாவுக்குத்தான் போக வேண்டும் என்று சொன்னாள்.''
'வீண் பேச்சு எதற்கு?சினிமா எப்படி இருந்தது என்று சொல்.'
******
கம்ப்யூட்டர் ஜாதகம் கணிக்கும் இடத்தில் ஒருவன் கேட்டான்,''கம்ப்யூட்டரே,நீ எவ்வளவு நாள் பழுதில்லாமல் இயங்குவாய்?''
''நீ நாளை மதியம் சாகப் போகிறாய்!நான் எவ்வளவு நாள் உழைத்தால் உனக்கென்ன?''என்று பதில் தந்தது கம்ப்யூட்டர்.
******
ஒரு பணக்காரருக்குக் காலில் முள் தைத்துவிட்டது.டாக்டரிடம் சென்று காண்பித்தார்.''உங்களுக்கு கண் ஆப்பரேசன் செய்யணும்,''என்றார் டாக்டர்.''காலிலேதானே முள் தைத்திருக்கிறது?கண்ணில் ஏன் ஆப்பரேசன் செய்யணும் என்று சொல்றீங்க?''என்று பணக்காரர் கேட்டார்.
''உங்களுக்குக் கண் ஒழுங்காய்த் தெரிந்திருந்தால் இப்படி முள்ளை ஏன் மிதிக்கிறீர்கள்?"'என்றார் டாக்டர்.
******
''எல்லா ஆண்களுக்கும் வேலை கொடுப்பது எப்படி?''என்று மன்னன் கேட்டான்.அமைச்சர் சொன்னார்,''ஆண்கள் எல்லோரையும் ஒரு தீவிலும்,பெண்களை எல்லாம் வேறு ஒரு தீவிலும் குடியேற்றுங்கள் எல்லா ஆண்களுக்கும் வேலை கொடுத்து விடலாம்.''
'புரியவில்லையே,'என்று மன்னன் சொல்ல அமைச்சர் தொடர்ந்தார்,''எல்லா ஆண்களும் மறு தீவுக்கு செல்ல படகு கட்ட ஆரம்பித்து விடுவார்கள்,மன்னா!''
******
''பசுவிலிருந்து,பால் வரும்,பாலிலிருந்து வெண்ணெய் வரும்,வெண்ணையில் இருந்து நெய் வரும்,நெய்யிலிருந்து என்ன வரும்?''
'தெரியலையே'
''வாசம் வரும்!''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ரசித்தேன்...

Post a Comment