உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மரண தண்டனை

1

Posted on : Saturday, January 25, 2014 | By : ஜெயராஜன் | In :

மரண தண்டனை தரலாமா கூடாதா என்ற விவாதங்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன.பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தத்துவமேதை ரூசோ தனது'சமுதாய ஒப்பந்தம்' என்னும்  நூலில் இது குறித்து என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
''நாட்டின் நலனுக்காக ஒரு மனிதன் இறக்க வேண்டும் என்றால் அந்த மனிதன் இறக்க வேண்டியதுதான்.நாட்டின் நலனுக்காக,கேட்டபோது உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மீதுதான் ,அவனுடைய உயிர்,இதுவரை,நாட்டினால் காப்பாற்றப்பட்டு வந்தது.ஒரு நாட்டின் பிரஜையாக அவன் எப்போது ஆகிறானோ,அப்பொழுதே அவனுடைய உயிர் அவனுக்கு சொந்தமில்லை.அவனது உயிர், நாட்டினால் அவனுக்கு அளிக்கப்பட நன்கொடையாகி விடுகிறது.
சமுதாய உரிமைகளை பாதிக்கக்கூடிய விதமாக எவன் ஒருவன் நடந்து கொள்கிறானோ,அவன் ஒரு குற்றவாளி.அவன் நாட்டிற்கு துரோகம் செய்தவன் ஆகிறான்.சமுதாயத்தின் சட்ட திட்டங்களை மீறி நடக்கிற அவன் அந்த சமுதாயத்தில் ஒரு உறுப்பினராய் இருக்க தகுதியற்றவன் ஆகிறான்.மற்றும் சமுதாயத்தின் மீது போர் தொடுத்தவன் ஆகிறான்.இப்படிப்பட்ட நிலையில் நாட்டின் நலனுக்கும்,அவனுடைய நலனுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.முரண்பாடு ஏற்பட்டுள்ள இரண்டில் ஒன்று அழிய வேண்டும்.ஒன்று அந்த நாடு அழிய வேண்டும்,அல்லது அவன் அழிய வேண்டும். ஒரு கொலை செய்தவனை அரசானது தூக்கு மேடை ஏற்றுகிறபோது அவனை தனது பிரஜை என்ற முறையில் செய்வதில்லை.அவனை நாட்டின் எதிரியாகக் கருதியே தூக்கு மேடை ஏற்றுகிறது.ஏனெனில்,எப்போது அவன் சமுதாயத்தின் உறுப்பினரான இன்னொருவனைக் கொலை செய்து விடுகிறானோ,அப்போதே அவன்,ஒரு பிரஜைக்குரிய தகுதியை  இழந்து விடுகிறான்.ஒரு தேச விரோதியை அந்த தேசத்தில் வைத்திருக்கலாமா?
ஒரு நாடானது சிதைவுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த நாட்டில் அதிகமான குற்றங்கள் நிலவுகின்றன.ரோமாபுரியில் குடியரசு முறை செழித்தோங்கி இருந்த காலத்தில் செனட் சபையோ,அதிகாரிகளோ,குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்ததே கிடையாது.அடிக்கடி மன்னிப்பு அளிப்பது குற்றங்களை அதிகப்படுத்தும்.''
பின் குறிப்பு:இது ஒரு கருத்துதான் இதை ஏற்க வேண்டும் என்பதில்லை.இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அன்றைய சூழலில் ஏற்பட்ட கருத்தென்றும்  கொள்ளலாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நாடு தான் இப்போது அழிந்து கொண்டு வருகிறது...

Post a Comment