உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கிண்டல்

3

Posted on : Monday, January 13, 2014 | By : ஜெயராஜன் | In :

கிண்டலும் கேலியும் தமிழனுக்கு ஆகி வந்த கலை.ஒருவன் தற்கொலை செய்து கொள்ள விரும்பினானாம்.அதற்கு பல முயற்சிகள் செய்து பார்த்தும் பலன் ஏதும் இல்லை.அப்படி என்ன செய்தான் என்று கேட்கிறீர்களா?

 எள்ளுப்பொடி நல்லெண்ணெய் வச்சி 
இருபது தோசை தின்னு பார்த்தேன்.
அப்போதும் போகலியே
அரும்பாவி என்னுசிரு!

சிரட்டையிலே தண்ணி வச்சி 
சீவனை விட உள்ளே பாய்ஞ்சேன்.
அப்போதும் போகலியே
அரும்பாவி என்னுசிரு!

மோட்டுல கயித்தைப் போட்டு 
முத்தத்தில நின்னு பார்த்தேன்.
அப்போதும் போகலியே 
அரும்பாவி என்னுசிரு!

பஞ்சு மருகையிலே 
பல தடவை முட்டிப் பார்த்தேன்.
அப்போதும் போகலியே 
அரும்பாவி என்னுசிரு!.

அவன் முயற்சி வெற்றி பெற நாமும் வேண்டிக் கொள்வோம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

ஹா... ஹா...

Haa haaa..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Post a Comment