உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆப்பு

2

Posted on : Thursday, January 23, 2014 | By : ஜெயராஜன் | In :

இந்தப் பாட்டைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன்!

''சாயங்காலம் கைபிடிச்சி
இரவில் சூடேற்றி
சாமத்தில் ஒண்ணு சேர்ந்து
காலையில் இரண்டையும் பிரிச்சிடுவோம்.''

என்னங்கண்ணா,இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் படிக்க சொல்றீங்களே என்று கேட்கிறீர்களா?அவசரப்படாதீர்கள்.இதன் பொருளை முதலில் படியுங்கள்.

சாயங்காலம் கைபிடிச்சி =மாலையில் மாட்டு மடியில் கை வைத்துப் பால் கறந்து,
இரவில் சூடேற்றி =இரவில் பாலை சுட வைத்து
சாமத்தில் ஒண்ணு சேர்ந்து  =சாமத்தில் புளித்த மோரோடு பாலை சேர்த்து
காலையில் இரண்டையும் பிரிச்சிடுவோம் =மறுநாள் காலையில் தயிராய் மத்தால் கடைந்து,மோர் தனியாக,வெண்ணெய் தனியாகப் பிரித்திடுவோம்.

என்ன சரிதானே!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

நானும் என்னமோ நினைத்தேன்... நீங்கள் சொன்னது சரி தான் ஐயா...

நல்ல விடுகதை !

Post a Comment