உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அபராதம்

0

Posted on : Saturday, October 24, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு சர்வாதிகார நாட்டில் ஒரு கோழிப் பண்ணைக்கு அரசாங்க அதிகாரி வந்தார்.அவர் கோழிகளுக்குப் போடும் தீவனம் பற்றி அங்கிருந்த மேலாளரிடம் கேட்டார். ''நான் எதுவும் போடுவதில்லை.அதுகளே சாக்கடையில்,தெருவில் கிடைப்பதை த்தின்னும்.''என்று மேலாளர் சொன்னார்.அதிகாரி கோபத்துடன் ''நீங்கள் செய்வது சுகாதாரக் கேடானது.எல்லாக் கோழிகளுக்கும் நோய்பரவலாம்.உங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.''
அதிகாரி மூன்று மாதம் கழித்து அங்கு வந்து அதே கேள்வி கேட்டார். ''நான் பால் ,நெய்,தேன்எல்லாம் கொடுக்கிறேன் ,சார்''என்றார் மேலாளர்.''நாட்டிலே உணவுப் பஞ்சம்.மக்களுக்கு இல்லாத உணவுப் பொருட்களை கோழிக்குப் போட்டு வீணடிக்கிறீர்கள்.எனவே ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.''என்றார் அதிகாரி.
அடுத்து மூன்று மாதம் கழித்து அதிகாரி வந்து அதே கேள்வி கேட்டார். ''சார்,நான் தினமும் என் கோழிகளுக்குஇரண்டு ரூபாய் கொடுத்து எது பிடிக்குமோ அதை வாங்கி சாப்பிடுங்கள்,''என்று சொல்லி விட்டேன் ''என்றார் மேலாளர் கடுப்புடன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment