உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நிம்மதி

1

Posted on : Wednesday, February 26, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்தது.ஜென் குரு  ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும்  மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும்,  தனக்கு மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு,''ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,''என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல்,'எடுத்தக் கொள்ளுங்கள் குருவே,''என்றார்.குரு,''நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?''என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.குரு தயங்காது,''எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்?நீ என்னிடமே வேலை பார்க்கலாமே?என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா.ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று சொல்ல மன்னனும் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆண்டு கழித்து குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,''நாடு எப்படி இருக்கிறது?வரவு செலவு எப்படி இருக்கிறது?நீ எப்படி இருக்கிறாய்?''என்று கேட்டார்.மன்னனும்,''நாடு சுபிட்சமாக இருக்கிறது.நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன்.இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,''என்று சொன்னார்.குரு,''அதற்கு அவசியமில்லை.நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால்  இந்த நாடு,'என்னுடையது'என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதி இல்லை.இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,''என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை  பெற்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நான் எனது - இரண்டையும் ஒழித்தால் என்றும் சுகம்-சுபம் தான்...

Post a Comment