உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இறைவன் எங்கே?

1

Posted on : Saturday, February 22, 2014 | By : ஜெயராஜன் | In :

சந்தோசப்படும்போது சிரித்து,வருத்தப்படும்போது அழுபவனை நான் காண விரும்புகிறேன்.சுகம்,துக்கம் இரண்டையும் அடக்கிக்கொண்டு 'கண்ணீர் பெருக்குவது பலவீனம்,சிரிப்பது லேசானது,'என்று நினைப்பவர்களுடன் எனக்கு எந்தவிதமான கருத்து ஒற்றுமையுமில்லை.வாழ்க்கை என்னைப் பொறுத்தவரையில் ஆனந்தமான விளையாட்டு,தன்னிச்சையானது, எளிமையானது.அதில் போட்டி,பொறாமை,கோபம்,அற்பத்தனத்திற்கு இடமே இல்லை.கடந்த காலத்தைப்பற்றி நினைப்பதில்லை.எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுமில்லை.எனக்குநிகழ்காலம்தான்யாவும்,எல்லாமும்.எதிர்காலத்தைப் பற்றிய கவலை,நம்மைக் கோழையாக்கி விடுகிறது.கடந்த காலத்தின் சுமை நம் இடுப்பை முறித்து விடுகிறது.நாம் வீணாக சுமையை நம்மீது சுமத்திக் கொண்டு நம்பிக்கைகள்,பழகி விட்ட பழக்கவழக்கங்கள்,வரலாறுகளின் இடிபாடுகளுக்கிடையே அழுந்திக் கிடக்கிறோம்.அதிலிருந்து மீண்டெழும் வலிமையோ,ஆற்றலோ நமக்கில்லை.மீண்டு எழ  வேண்டுமென்ற நினைப்புக்கூட நம்மிடம் இல்லை.எங்கு வாழ்க்கை இருக்கிறதோ,அன்பும்,இனிமையும்,செயல்பாடும் உள்ளதோ,அங்குதான் இறைவன் உள்ளான்.வாழ்க்கையை இன்பமுள்ளதாக,இனிமை கூடியதாக ஆக்கிக் கொள்வதுதான் உபாசனை.அதுதான் மோட்சமும்.உன்னால் அழ முடியாவிட்டால்,சிரிக்க முடியாவிட்டால்,நீ மனிதனே அல்ல,பாறாங்கல் எனச் சொல்லுகிறேன்.
                       --பிரேம்சந்த் எழுதிய 'கோதானம்'என்னும்  நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமையாகச் சொல்லி உள்ளார்... பிரேம்சந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

Post a Comment