உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நிபந்தனை.

0

Posted on : Sunday, February 23, 2014 | By : ஜெயராஜன் | In :

தனது திருமண பத்தாவது ஆண்டு நிறைவு தினத்தில்,கணவன் மனைவிக்கு ஒரு வைர ஒட்டிகை பரிசளித்தார்.அன்றிலிருந்து ஆறு மாதம்மனைவி கணவனிடம்பேசவே இல்லை.ஏன்?ஒட்டிகை போலி  வைரமா?இல்லை.பின் என்ன,அவள் கேட்ட மாடலில் இல்லையா?இல்லவே இல்லை,அவளுக்கு அந்த ஒட்டிகை மிகவும் பிடித்திருந்தது.பின் என்ன பிரச்சினை?பிரச்சினை ஒன்றும் இல்லை.ஒட்டிகை வாங்கித் தருவதற்கு கணவன் போட்ட நிபந்தனையே அதுதான்.
******
அலுவலகத்தில் அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்,''சார்,நீங்கள் ஆபீசில் சிங்கம் போல இருக்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைக் கண்டாலே பயப்படுகிறார்கள்.வீட்டிலே நீங்கள் எப்படி சார்?''
''அட,வீட்டிலேயும் நான் சிங்கம் தான் ஐயா.என்ன,சிங்கத்தின் மீது காளி  தேவி அமர்ந்திருப்பாள்.''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment