உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆலயம்

1

Posted on : Tuesday, February 25, 2014 | By : ஜெயராஜன் | In :

எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளை கல்லாக்கி கோவிலில் வைத்திருக்கிறது.கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும்.ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை.
******
நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால்,குளிர்ந்த கோபம் தான் கண்ணீர்.உறைந்த கண்ணீர் தான் சிரிப்பு.
******
வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதான் இருக்கிறது.எங்கேயோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேன்டியதுதான் ;விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு,புரிந்த கணக்கு,முன்னால்  போட்ட கணக்குதான்.
******
சாவதையும்,வாழ்வதையும் விட,எதற்காகச் சாகிறோம்,எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.வாழ்க்கை வீம்பாகி விடும்போது,அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை.
******
சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடைய மாட்டான்.பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.
******
என் எண்ணங்களை நானே நூற்று,என் மேலேயே பின்னிக்கொண்டு,அவை இன்னதென்று கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.
******
வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை?உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கிறதா?பார்க்க முடியுமா?அதேபோல் உயிர் பிரிகையில் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா?
******
                            --'லா.ச.ராமாமிர்தம் கதைகள்' என்னும்  நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சமாதானம் உட்பட அனைத்தும் அருமை ஐயா... பகிர்வுக்கு நன்றி...

Post a Comment