உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சென்ரியு கவிதைகள்-2

1

Posted on : Wednesday, February 05, 2014 | By : ஜெயராஜன் | In :

பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்.
******
நிழலை விலை பேசி முடிக்கவில்லை
தொண்டர்கள்.தலைவர்
விற்றுவிட்டார் மரத்தை.
******
மாறுதல் உத்தரவு பத்திரிகையில்
இடம் மாறி உறிஞ்சும்
அரசாங்கக் கொசுக்கள்.
******
ஒரே சமயத்தில் வேண்டாம் என்று
பாடகர் முடித்ததும்
வாய்விட்டழுதது குழந்தை.
******
வடை நன்றாயில்லை.
வடை சுடும் கிழவியைக்
கொத்திப் போயின காக்கைகள்.
******
எதெடுத்தாலும் பத்து ரூபாய்
 கடை.
எதெடுத்தாலும் பத்துநாள்.
******
கூரை பிரித்த திருடன் குறிப்பு.
உடைக்க மனம் வரவில்லை.
புதுப்பூட்டு.
******
எதிரியின் முகத்திரை
கிழித்தபோது
தன்முகம்.
******
விலங்குகளில் ஒருவகை
எழுதப் படிக்கத்
தெரிந்தது.
******
பதவியை விட்டவன் பிடித்து விட்டான்.
பேருந்தை விட்டவன்
இன்னும் நிற்கிறான்.
******
மரணம் நிச்சயம்
மருந்தாவது இருக்கக்கூடாதோ
இனிப்பாக.
******
முதலாளி சமாதி மீது
முட்டிக்கொண்டு அழுதான்.
சம்பளப்பாக்கி.
******
                                      -ஈரோடு தமிழன்பன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

எழுதப் படிக்கத் தெரிந்ததும், எழுதப் படிக்கத் தெரிந்தவுடனும் விலங்குகளை விட கேவலம் ஆகி விடுகிறார்களே....!?!

மற்றவை அருமை...

Post a Comment