உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெருக்கல்

3

Posted on : Monday, February 24, 2014 | By : ஜெயராஜன் | In :

கணவன் மனைவியிடம்,தான் ஒரு அற்புத விளக்கைக் கண்டதாகச் சொன்னான்.மனைவி ஆர்வத்துடன்,''நீங்கள் விளக்கைத்தேய்த்து என்ன வரம் கேட்டீர்கள்?''கணவன் சொன்னான்,''என் மனைவியின் மூளையின் சக்தியை பத்து மடங்கு அதிகம் பண்ணிக்கொடு,என்று கேட்டுக் கொண்டேன்,''மனைவி மிக்க மகிழ்ச்சியுடன்,''அப்படியா,அந்த பூதம் அதை செய்து கொடுப்பது பற்றி ஏதாவது சொன்னதா?''என்று கேட்டாள்.கணவன் வருத்தமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,''அந்த பூதமென்ன சொல்லிற்று,தெரியுமா?ஜீரோவை எந்த எண்ணால் பெருக்கினாலும் ஜீரோ தானே வரும் என்று கேட்கிறது.''
******
கணவன் மனைவி,இருவரும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட சென்றனர்.உணவு வைக்கப்பட்டதும் கணவன் ஆர்வத்துடன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.மனைவி கணவனிடம்,''வீட்டில் எப்போதும் சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீர்களே,இன்று மறந்து விட்டீர்களா?''என்று கேட்டாள்.கணவன் சொன்னான்,''கவலைப்படாதே,இங்கு உள்ள சமையற்காரர் நன்றாகவே சமைப்பார்.''
******
ஒருவன் வீட்டு வாசலில் ஒரு பலகை  வைத்திருந்தான்.அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?''ஏற்கனவே தொந்தரவுக்குள்ளான என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.எனக்குத் திருமணம் ஆகி விட்டது.''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

ஹா... ஹா... அனைத்தும் கலக்கல்...

நேரம் இருக்கும் போது தொடர்புகொள்ளுங்கள் என்பதை போல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தோசப்படுத்துங்கள் என்பதை செய்கிறீர்கள் .வாழ்த்துக்கள் .

நேரம் இருக்கும் போது தொடர்புகொள்ளுங்கள் என்பதை போல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தோசப்படுத்துங்கள் என்பதை செய்கிறீர்கள் .வாழ்த்துக்கள் .

Post a Comment