உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஜென் பொன்மொழிகள்.

2

Posted on : Tuesday, February 11, 2014 | By : ஜெயராஜன் | In :

ஞானம் என்பது அடையக் கூடிய ஒன்றல்ல.ஒவ்வொன்றாய் இழந்தபின் மிஞ்சுவது தான் ஞானம்.
******
நாள் என்பது வெறும் பகல் மட்டும் அல்ல.இரவும் சேர்ந்ததுதான் அது.மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல.அதுவும் வாழ்வின் ஒரு அங்கமே.அது இன்றி வாழ்க்கை முழுமை அடையாது.
******
தியானம் என்பது எண்ணங்களை வெல்லுவது அல்ல.அவற்றைக்  கடந்து சென்று விடுவதுதான் தியானம்.
******
எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான்,இது சரி,இது தவறு,இது விருப்பமானது,இது வெறுக்கக் கூடியது,என்பவை புகுந்து விடுகின்றன.
******
மனிதனுக்காகத்தான் மதமே அன்றி,மதத்துக்காக மனிதன் அல்ல.மனிதத்தன்மை மறந்த மதம் யானையின் மதமே.
******
விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு.தேவை கடல் அளவு,ஆனால் கிடைப்பது கை அளவுதானா?கையையே கடலாக
நினைத்துக்கொள்.
******
அறிவுக்கோ,விவாதங்களுக்கோ எட்டாததுதான் ஞானம்.தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.தெரிந்ததாக வேடம் பூணாதே.
******
ஞானம் என்பது விவாதித்தல் அல்ல.விவாதம் கடைசியில் இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடும்.ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல.அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான்.
******
சகிப்புத்தன்மை தான் ஞானத்தின் திறவுகோல்.சகிப்புத்தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அனைத்தும் அருமையான பொன்மொழிகள்...

அவசியமான பொன்மொழிகள் ஐயா

Post a Comment