உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பேசத்தெரிந்து கொள்ளுங்கள்.

1

Posted on : Sunday, June 30, 2013 | By : ஜெயராஜன் | In :

உரையாடல் ஒரு கலை.இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை.அந்தக் கலை கைவரச்சிலவழிகள் :
*உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் ,தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள்.அதனால் எந்தப் பயனும் இல்லை.கேட்பவர்க்கும் போர்.
*நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள்.நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம்.ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள்.நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள்.எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள்.
*குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள்.'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது.அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள்.
*திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள்.அடுத்தவர் பேசும்போது அரை வினாடி நிறுத்தினால் உடனே நுழைந்து வேறு விசயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது.
*எதிராளியின் பேச்சில் உண்மையான அக்கறை காட்டுங்கள்.அவர் உள்ளம் திறந்து பேச அது வழி வகுக்கும்.அவர் பேசும் விஷயத்தை விரிவு படுத்துங்கள்.உரையாடல் இனிமையாய் அமையும்.
*ஒரு விசயத்தைப் பற்றி ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வேறெங்கோ சென்று விட்டால் நீங்கள் அதை மறவாது விட்டுப் போன விஷயத்தை ஞாபகப் படுத்துங்கள்.இது பண்பாடு மட்டும் அல்ல.அவருடைய பேச்சில் உண்மையான அக்கறை காட்டுவதாக அமையும்.
*எதையும் அடித்துப் பேசி முத்தாய்ப்பு வைக்காதீர்கள்.எதிராளிக்கு வேறு கருத்தும் இருக்கக் கூடும் என்பதற்கு இடம் கொடுத்துப் பேசுங்கள்.
*தாக்காதீர்கள்.கெட்ட விசயத்தைக் குறை சொல்லும்போது கூட குத்தலாகவோ அவதூறாகவோ பேசாதீர்கள்.கிண்டலாகப் பேசுவது உங்கள் மூளைக் கூர்மையைக் காட்டக் கூடும்.ஆனால் எதிராளிக்கு இருப்புக் கொள்ளாமல் போகும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமையான கருத்துக்கள்... நன்றி...

Post a Comment