உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா-4

2

Posted on : Thursday, June 13, 2013 | By : ஜெயராஜன் | In :

கைலாய மலை தற்போது சீனாவில் உள்ளது.
******
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
******
டென்மார்க்கின் தேசியக் கொடிதான் உலகில் மிகப் பெரியது.
******
டாக்காவில் எழு நூறுக்கும் ஏற்பட்ட மசூதிகள் உள்ளன.எனவே அதை 'மசூதிகளின் நகரம்' என்று அழைக்கின்றனர்.
******
இத்தாலியில் உள்ள சால்பரினோ என்ற இடத்தில் நடந்த போரின் கொடுமையைக் கண்டு மனித நேயமிக்க ஹென்றி டுனான்ட் என்பவரால் ஏற்படுத்தப் பட்டதுதான் செஞ்சிலுவை சங்கம் .
******
தமிழ் நாட்டின் முக்கிய சின்னங்கள்:
மரம்-பனைமரம்.
விலங்கு -வரையாடு.
மலர்-செங்காந்தள் மலர்.
பறவை-புறா.
******
தந்தையின் மீது பாசமும் தாயைப் போட்டியாளராக நினைத்து வெறுக்கும் மகளுக்கு உள்ள மனநோய்க்கு 'எலெக்ட்ரோ காம்ப்ளெக்ஸ் 'என்று பெயர்.
******
கழுத்து இல்லாத ஒரே உயிரினம்,''மீன்''
******
உலகின் மிகப் பெரிய மலை சிகரங்களைக் கொண்ட நாடு,நேபாளம்.
******
ஆசியாவின் குளிர்ச்சியான பாலைவனம்,கோபி பாலைவனம்.
******
முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது,'குதா ஹபீஸ்'என்று சொல்வர்.இதற்கு,'கடவுள் உம்மை பாதுகாப்பாராக'என்று பொருள்.
******
உலகின் மிகக் குறுகிய எல்லைக்கோடு ஸ்பெயின் நாட்டிற்கும் ஜிப்ரால்டருக்கும் இடையில் உள்ளது.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

//கோபி பாலைவனம்/// எங்கிருக்கு..?

தகவலுக்கு நன்றி சகோ...!!

தொழிற்களம் வாசியுங்கள்

பல புதிய தகவல்கள்... நன்றி...

Post a Comment