உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தந்திர மனது

2

Posted on : Wednesday, June 12, 2013 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார்.என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.''நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ  அப்படியே இருக்கலாம்.நீங்கள்நம்பும் கடவுள்தான் உண்மையான தகப்பனார்.அவருக்கு எல்லாம் தெரியும். அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.''இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது?இந்த மனம் எவ்வளவு தந்திரமானது!இந்தக் 'கடவுள்' உங்கள் தந்திர மனதின் வேலைதான்.ஞானி சாரஹா,''நம்பிக்கை என்பது உண்மை இல்லை.உண்மை நம்பிக்கை ஆகாது.உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,''என்கிறார்.
சில சமயம் நீங்கள் உடலால் ஏமாற்றப் படுகிறீர்கள்.எப்படியோ முயற்சி செய்து உங்கள் உடலைவிட்டு நீங்கள் தாண்டிச் சென்றால் மனத்தால் மயக்கப்படுகிறீர்கள்.இது மிகவும் தந்திரமானது.மிக மோசமாக ஏமாற்றக் கூடியது.உங்களுடைய நம்பிக்கை இல்லாமலேயே உண்மை வேலை செய்யும்.நம்பிக்கையின் மூலம் பொய் தான் வேலை செய்யும்.இந்தப் பொய்மைக்கு உங்கள் நம்பிக்கை தேவைப் படுகிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

சொன்ன உதாரணமும், ஞானி சாரஹா அவர்களின் வரிகளும் அருமை...

முடிவில் உண்மையான மந்திரம்...

நன்றி...

நீங்கள் சொல்வது உண்மை தான்

Post a Comment