உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனதின் சக்தி

1

Posted on : Monday, June 10, 2013 | By : ஜெயராஜன் | In :

எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை மனிதன் கற்றுக் கொண்டதாகத்  தெரியவில்லை.எதிர் காலத்தில் மகிழ்ச்சி நிரம்பிய அமோகமான வாழ்க்கை கிட்டப்போகிறது என்று பகல் கனவு காண்பதிலேயே நிகழ்காலத்தை சிறிதும் அனுபவிக்காமல் அனைவரும் தங்கள் வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.இருப்பதைக் கொண்டு இந்த வினாடியை நன்கு அனுபவித்து வாழக் கற்றுக் கொள்பவன்தான் புத்திசாலி.
******
ஒவ்வொரு மனிதனும் தன மனதில் ஒரு செயற்கை எல்லைக் கோட்டை அமைத்துக் கொள்கிறான்.ஒவ்வொருவரும் அவரவர் நினைக்கும் அளவுக்குத்தான் வாழ்வில் முன்னுக்கு வர முடியும்.மனதில் எழும் எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் எல்லைக் கோடுகளே இருக்கக் கூடாது.
******
உங்களுக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரமில்லை என்றால் நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள்.
******
பணம் நிறைந்த பகட்டான வாழ்க்கை கிடைத்தால்தான் வாழ்வை நன்றாக அனுபவிக்க முடியும் என்று அனைவரும் தவறாக நினைத்து அதை அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வாழ்வை நரகமாக்கிக் கொண்டு அல்லல் படுகிறார்கள்.ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புபவன் அதற்காகக் கொடுக்க வேண்டிய விலை மகிழ்ச்சி,ஆரோக்கியம்,மன நிம்மதி போன்றவைதான்.
******
உலகில் அனைவரும் பணக்காரராக வேண்டும் என்று எண்ணி செயல்படுகிறார்கள்.ஒவ்வொருவரும் அதிகாரம் மிக்க பதவியை அடைய ஆசைப்படுகிறார்கள்.போர் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் இவையே.பெரிய பதவியை அடையவும்,பணம் சேர்க்கவும்,அடைந்த பதவியையும் சேர்த்த பணத்தையும் காப்பாற்ற ஏற்படும் ஒரு போராட்டமாக நம் வாழ்க்கை அமைந்து விடுகிறது.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சிந்திக்க வேண்டிய வரிகள் பல... நன்றி...

Post a Comment