உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நல்ல செய்தி

2

Posted on : Tuesday, June 18, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு சித்திரக் கலைஞன் தான் சிரமப்பட்டு வரைந்த இருபது படங்களை ஒரு பொருட்காட்சியில் விற்பனைக்கு வைத்தான்.மறுநாள் அவன் அங்கு வந்தபோது எல்லாப் படங்களும் விற்பனையாகியிருந்ததைப் பார்த்து வியந்து போனான்.அந்த காட்சி சாலையின் உரிமையாளரிடம் அது பற்றிக் கேட்டான்.அவர் சொன்னார்,''உனக்கு நல்ல செய்தி ஒன்றும் கெட்ட செய்தி ஒன்றும் வைத்துள்ளேன்,''என்றார்.ஆர்வத்துடன் அவன் விபரம் கேட்க அவர் சொன்னார்,''நல்ல செய்தியை முதலில் சொல்கிறேன்.நேற்று ஒருவர் வந்து உன்னுடைய படங்களை எல்லாம் பார்த்தார்.பின் என்னிடம் இந்தப் படங்களை வரைந்தவர் இறந்த பின் இப்படங்கள் நல்ல விலைக்குப் போகுமா என்று விசாரித்தார்.நானும் கண்டிப்பாக நல்ல விலைக்குப் போகும் என்றேன்.உடனே அவரே அத்தனை படங்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டார்,'' அவன்,''இது நல்ல செய்திதான்.சரி,கெட்ட செய்தி ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே,அது என்ன?''என்று கேட்டான்.அவர் சொன்னார்,''அந்த ஆள் வேறு யாரும் இல்லை.உன்னுடைய டாக்டர்தான்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

டாக்டர் ஏதோ முடிவோடு தான் இருக்கிறார் போல...!

haa haa...

Post a Comment