உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சாப்பாடு இலவசம்!

1

Posted on : Monday, July 01, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு உணவு விடுதியில் கீழ்க்கண்டவாறு எழுதிப் போடப்பட்டிருந்தது.
      ''இங்கு சாப்பிட்டு விட்டு நீங்கள் பணம் தர வேண்டியதில்லை.உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களிடம் வசூலித்துக் கொள்வோம்.''
இதைப் பார்த்தவுடன் பசியாய் இருந்த ஒருவன் உணவகத்திற்குள் நுழைந்து வயிறு புடைக்க சாப்பிட்டான்.சாப்பிட்டு வெளியே செல்லும்போது அவனிடம் விடுதி சிப்பந்தி ஒரு பில்லை நீட்டினார்.அவனுக்குக் கோபம் வந்து விட்டது.விடுதி உரிமையாளரிடம்,''என்ன மோசடி செய்கிறீர்களா? பிள்ளைகளிடம் வசூலித்துக் கொள்வோம் என்று எழுதிப் போட்டுவிட்டு இப்போது சாப்பிட்டதற்கு பணம் கேட்கிறீர்களே?''என்று கத்தினான். விடுதிக்காரர் அமைதியாகச் சொன்னார்,''ஐயா,இது நீங்கள் சாப்பிட்டதற்கான பில் அல்ல.உங்கள் தந்தை இங்கு முன்னால்  சாப்பிட்டதற்கான தொகைக்குரிய பில் இது.இதை உங்களிடம்தானே வசூலிக்க வேண்டும்?''அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அது 'சரி'...!

Post a Comment