உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா?-5

1

Posted on : Wednesday, July 03, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது.அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது.ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது.ஏன்?
            எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு  ஆவி சுற்றியிருக்கும்.தீப்பொறி கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன் படுகிறது.
******
துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீரில்தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது.ஏன்?
             துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை  கொடுக்கிறது.சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது தண்ணீர் ஆவியாகி stiff ஆன surface கிடைக்கிறது.
******
ஒரு காகிதத்தின் கனம் 0.01அங்குலம்.அதை 50 முறை மடக்கினால் அதன் கனம் எவ்வளவு இருக்கும்?
            பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் இருக்கும்.
******
ஒரு பேப்பரில் ஒரு கத்தியை வைத்து மடக்கிப்  பின் ஒரு உருளைக் கிழங்கை அறுத்தால் உருளைக் கிழங்கு அறுபடும்.ஆனால் பேப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் பேப்பர் அறுபடாமல் அப்படியே இருக்கும்.  காரணம் என்ன?
            
          பேப்பரின் fibre உருளைக் கிழங்கின் fibre  ஐ விட பலமானது.அதனால் பேப்பர் அறுபடுவதில்லை.உருளைக் கிழங்கிற்கு பதிலாக கடினமான பொருள் ஒன்றினை அறுத்தால் பேப்பர் அறுபடும்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்ல விளக்கம் அறிந்து கொண்டேன்... நன்றி ஐயா...

Post a Comment