உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

திருமணம்

3

Posted on : Wednesday, July 17, 2013 | By : ஜெயராஜன் | In :

'அனுபவம் பேசுகிறது,'என்பார்கள்.திருமணம் பற்றி எத்தனை விதமான அனுபவங்கள்!
*திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல.நாணயத்தின் இரு புறங்களும் ஒன்றை ஒன்று எதிர் கொள்ள முடிவதில்லை.ஆனாலும் சேர்ந்தே அவை இருக்கும்.
******
*ஒருவனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். கெட்ட மனைவி அமைந்து விட்டால் அவன் தத்துவ வாதியாகி விடுகிறான்.எப்படியும் நன்மைதான்.அதனால் திருமணம் செய்துகொள்.
******
*பெண்கள் தங்கள் கணவனை அரிய செயல்கள் புரிய ஊக்குவிப்பார்கள்.ஆனால் அவற்றை சாதிக்கத்தான்  விட மாட்டார்கள்.
******
*என்னால் எப்போதும் பதில் சொல்ல முடியாத கேள்வி இதுதான் ''இந்தப் பெண்களுக்கு என்னதான் வேண்டும்?''
******
*எனக்கு தீவிரவாதம் குறித்து எந்தவித அச்சமும் இல்லை.ஏனெனில்  எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
******
*திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய,நீ செய்ய .வேண்டியதெல்லாம்
1.நீ தவறுசெய்யும் போது  அதை ஒத்துக் கொள்.
2.நீ செய்தது சரிதான் என்றால் வாயை மூடிக் கொண்டிரு.
******
*ஒரு நல்ல மனைவி பல சமயங்களில் தனது  கணவனை பெருந்தன்மையுடன் மன்னிக்கிறாள்.எந்த சமயங்களில்?அவள் செய்தது தவறாயிருக்கும் போது .
******
*''என் மனைவி தேவதை.''
'நீ கொடுத்து வைத்தவன்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
******
*நான் என் மனைவியிடம் பேசியது சில வார்த்தைகள்.வந்த பதிலோ பல பக்கங்கள்.
******
*''உங்கள் நீண்ட காலத் திருமண வெற்றிக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?''
'வாரத்திற்கு இரண்டு நாட்கள் நல்ல உணவகம் ஒன்றிற்கு செல்வோம். குறைந்த வெளிச்சம்;நல்லிசை .சிறந்த நடனம்.அருமையான உணவு. இவை போதாதா?என்ன,நான் செவ்வாய்க்கிழமைகளில் செல்வேன்.என் மனைவி வெள்ளிக் கிழமைகளில் செல்வாள்.'
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

பல உண்மைகள்...

நன்றி...

மெல்ல ஒரு கவிதை போல வரிகளை தேர்வு செய்து குறைகளை கூட அழகுபடுத்தி வெற்றி கண்டுள்ளீர்கள் .அற்புதம் .

Beautifully translated. Very glad to see your blog has 1.5 lakh visitors.

Meyyappan

Post a Comment