உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வரம்

2

Posted on : Monday, April 01, 2013 | By : ஜெயராஜன் | In :

அறுபது வயதைக்கடந்த தம்பதிகள் அவர்கள்.கணவன் பெரிய பக்திமான்.அவர் பார்ப்பதற்கு இளமையாகவே இன்னும் இருக்கிறார்.அதனால் அவருக்கு ஆசைகளும் அதிகம்.அவர் மனைவியோ,உடல் சுருக்கம் விழுந்து பார்ப்பதற்கு மிக வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார்.ஒரு நாள் கணவன் பூஜை அறையில் தன்னை மறந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார்.அப்போது கடவுள் அவர் முன் தோன்றி,''பக்தா,உன் பக்தியை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்,கேள்,''என்றார்.அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன், ''கடவுளே,என் மனைவி என்னை விட ஒரு முப்பது வயதாவது இளமையாய் தோற்றம் அளிக்க வேண்டும்,''என்று கேட்டுக் கொண்டார். கடவுளும், ''இதோ,உன் ஆசை உடனே நிறைவேற்றப்படுகிறது,''என்று  கூறி மறைந்தார்.அடுத்த நிமிடம் கணவர் உடனே தனதுமனைவியை ஆவலுடன் நோக்கினார்.மனைவியின் தோற்றத்தில் எந்த மாறுதலும் காணப்படவில்லை.ஒன்றும் புரியாதவராய் தற்செயலாக  கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தவர் அலறி விட்டார்.ஆம்,இப்போது அவர் தொண்ணூறு வயதுக் கிழவன் போலக் காட்சி அளித்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

இது வரம் அல்ல ,சாபம் !

ஹா... ஹா...

கடவுள் நன்றாகவே கணக்கு போட்டுள்ளார்...!

Post a Comment